Friday, 7 December 2018

செய்தியில் நல்லது கெட்டது



ஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஒரு கட்சி கட்டுகிறார்.

ஊடகங்களில் நல்ல செய்தி அல்லது கெட்ட செய்தி என்று பிரித்துப் பார்க்க முடியுமா? இது நேற்றைக்கு எழுந்த கேள்வி. முதலில் செய்தி என்ன, யார் பார்வையில் இருந்து, எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டது என்பதெல்லாம் அந்த நல்லது அல்லது கெட்டது என்கிற அடைமொழியைத் தீர்மானிக்கின்றன.

ரைட்டு. இதுவும் ஒரு பார்வை. கோபம் நல்லதா கெட்டதா என்றால் இப்போதைய விஞ்ஞானிகள் சொல்லுவது உணர்ச்சிகளில் நல்லது கெட்டதுன்னு ஒண்ணும் கிடையாது. அவை ஏதோ செய்தி சொல்ல வருகின்றன. அதை புரிந்து கொள்ளப்பாருங்கள்.

ஆனா யதார்த்தமா பார்த்தா கோபம் ஆசை இவை எல்லாம் மோசமான விளைவுகளையே தருவதால் அவை கெட்டது என்றே சொல்லப்படுகின்றன. கோபத்தால் கெட்டுப்போன காரியங்கள் எத்தனை? ஆசைகளால் வீழ்ந்த மாந்தர் எத்தனை! விளைவுகளை ஒட்டியே இவை நல்லதா கெட்டதா என்று தீர்மானிக்கப்படுகின்றன.

அதே போல செய்திகளும்.

நமக்கு அவை ஒரு ஊக்கத்தை நம்பிக்கையை கொடுக்கின்றனவா இல்லையா? ஏமாற்றம், சோர்வை கொடுக்கின்றனவா? கோபத்தை தூண்டுகின்றனவா? வெறுப்பை தூண்டுகின்றனவா? நம் மனப்பாங்கையே மாற்றுகின்றனவா?

ஶ்ரீ ரமண பகவானும் சொல்லுகிறார். “நல்ல மனம் என்றும் கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்களில்லை. மனம் ஒன்றே! வாசனைகளே சுபம் என்றும் அசுபம் என்றும் இரண்டு விதம். மனம் சுப வாசனை வசப்பட்டு நிற்கும்போது நல்ல மனமென்றும், அசுப வாசனை வசப்பட்டு நிற்கும்போது கெட்ட மனம் என்றும் சொல்லப்படும்.”

அது போலத்தன் செய்திகளும். என்ன விளைவை உண்டாக்குகின்றன என்பதை பொருத்து. செய்திகள் நம்மில் தூண்டக்கூடியதை வைத்தே அவை நல்லவை கெட்டவை என்று சொல்கிறேன்.
கால்கள் பூமியில் படும் வரை பூமியின் விதிகளைத்தான் பின்பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!

ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்

முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை . சிரமமாக இருக்கிறது . அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை ....