வெற்றிலை பாக்கு கலாசாரம் இந்தியா எங்கும் உண்டு என்றாலும் வட இந்தியாவில் அது மிக அதிகம். அதுவும் கண்ட இடம் காணாத இடம் என்று எல்லா இடங்களிலும் துப்புவது பலருடைய வழக்கம். கயா போன்ற இடங்களில் தெருக்கள் எல்லாமே சிவப்பாகத்தான் இருக்கும்.
மும்பை ரயில்வே மட்டுமே ஒரு நாளுக்கு 60 ஆயிரம் லிட்டர் செலவழித்து இந்த சாயத்தை ரயில்களில் இருந்து கழுவுகிறது. சயான் ஸ்டேஷனில் மட்டும் தினசரி 10 லிட்டர் அமிலம் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் மாதுங்காவின் ராம் நாராயண் ருயா கல்லுரி மாணவிகள் எட்டு பேர் இதற்கு சுற்றுப்புற சூழ்லை பாதுக்காக்கும் எளிய சுத்தம் செய்யும் முறையை கண்டு பிடிக்க விழைந்தனர். ஆராய்சிகள் பல செய்து இறுதியில் சில பாக்டீரியாக்கள் என்சைம்கள் கலந்த கலவையை உருவாக்கினர். இது சிவப்பு சாயத்தை நிறமில்லாமல் ஆக்கிவிடுகிறது. பாஸ்டனில் நடந்த ஐஜெம் நிகழ்ச்சியில் இது தங்கப்பதக்கத்தை வென்று இருக்கிறது.
https://timesofindia.indiatimes.com/city/mumbai/red-letter-day-paan-stain-eraser-wins-students-a-us-award/articleshow/66595571.cms
No comments:
Post a Comment
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!