Thursday, 13 December 2018

நீர் நிலை மேலாண்மை.


கோவாவில் க்யூபெம் அருகே  மோர்பிர்லா என்னும் பழங்குடி கிராமத்தில் இரண்டு பயிர்கள். பருவ மழை காலத்தில் விவசாயம். மழை விட்டு குளிர்காலத்தில் தோட்டப்பயிர்கள். அங்கிருக்கும் ஏராளமான நீர் அருவிகள் மூலம் இது சாத்தியமாயிற்று. ஆனால் கடந்த சில வருடங்களாக இப்படி இரண்டு பயிர்கள் விளைவிப்பது கடினமாயிற்று. நீர் தட்டுப்பாடே காரணம்.
அங்கே எம்ஈஎஸ் காலேஜின் என்எஸ்எஸ் அலுவலர் அங்கே சென்ற போது நீர்நிலைகளை சரியாக பராமரிக்காததே இதற்கு காரணம் என கண்டு பிடித்தார். தூர்ந்து போன நீர்நிலைகளை தூர் வார மாணவர்கள் களத்தில் இறங்கைனர். தீபாவளி விடுமுறையில் இவர்கள் அங்கே சென்று தூர் வாருதல், சிறிய செக்டேம்கள் அமைத்தல் போன்ற வேலைகளை செய்தனர். இதன் பயனாக அங்கே இருக்கும் சப்த கோடேஷ்வர் கோவிலின் புனித தீர்த்தத்துக்கும் நீர் வரத்துவங்கியது. இரண்டாம் பருவ பயிரையும் நாங்கள் வளர்க்கலாம் என்று கிராமவாசிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

2 comments:

  1. எனக்கு captcha படுத்தறதா இல்லியான்னு ஒரு டெஸ்ட்

    ReplyDelete

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!

ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்

முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை . சிரமமாக இருக்கிறது . அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை ....