தார் ரோடு போடும்போது கூடவே நெகிழி கழிவுகளை சேர்த்து போட்டால் ரோடு அதிக வருஷங்கள் உழைக்கிறது என்று பல வருஷங்களுக்கு முன்பே மதுரை தியாக ராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஶ்ரீ வாசுதேவன் கண்டுபிடித்தார். இந்த முறை சென்னை ஐஐடியிலும் நடைமுறைபடுத்தி காட்டப்பட்டு இருக்கிறது.
நமக்கு தோன்றலாம், அட இது அருமையாக இருக்கிறதே? ஒரு பக்கம் நெகிழி கழிவுகளை அகற்றலாம், இன்னொரு பக்கம் தார் ரோடுகள் நீண்ட நாள் உழைக்கும். இது வின் வின் சிச்சுவேஷன்!
உணமையில் அப்படித்தான் போட வேண்டும் என்று விதி முறை கூட இருக்கிறதாக கேள்விப்பட்டேன். ஆனால் நிச்சயமாக நடைமுறையில் இல்லை. ஏன்?
ரோடுகள் அடிக்கடி பழுதாவதிலும் அடிக்கடி டெண்டர் விட்டு காண்ட்ராக்ட் கொடுப்பதிலும் யாருக்கு ஆர்வம் இருக்கிறது? அதனால்தான் இது நடக்கவில்லை என்று தோன்றுகிறது.
ஒரு வழியாக அரசு நெகிழி கழிவை பிரச்சினை என்று ஒத்துக்கொண்டு 14(?) வகை நெகிழி தயாரிப்புகளை தடை செய்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட நெகிழியை என்ன செய்வது என்பது பிரச்சினையாக உருவெடுக்கும் போலிருக்கிறது.
பிரதமர் திட்டத்தில் கழிவறைகளை கட்ட இவற்றை பயன்படுத்தி உருவாக்கிய ப்ளாஸ்டோன் என்னும் கற்களை பயன்படுத்தலாம் என்கிறார் அதே பேராசிரியர்.
மேலும் விவரங்களுக்கு
https://tamil.thehindu.com/tamilnadu/article25966934.ece
No comments:
Post a Comment
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!