Saturday 26 January 2019

'நிறக்குருடு'



அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிற பாடலில் சொல்லியுள்ளபடி நாம் குறைகள் இல்லாமல் பிறந்திருந்தால் நன்றி செலுத்த வேண்டும்.
சிலருக்கு பிறவியிலேயே நிற வேறுபாட்டை அறிய முடியாமல் போகிறது. நிறக்குருடு என்கிறார்கள். புதுசாக இதுக்கு 'இன்னும் சரியாக' என்ன பெயர் என்று தெரியவில்லை. அதனால் நிறக்குருடு என்றே எழுதுகிறேன். blindness ஐ visually challenged என்று சொல்பவர்கள் மன்னிக்க.
இதிலும் பல வகைகள் உள்ளன. சிவப்பு பச்சைக்கு சரியாக வித்தியாசம் பார்க்க முடியாமல் இருப்பது ஒரு வகை. நீலம் மஞ்சள் வித்தியாசம் தெரியாமல் இருப்பது இன்னொரு வகை. இப்படி இன்னும் பல. முழுக்க முழுக்க நிறமே இல்லாமல் கருப்பு வெள்ளையின் சாயல்களாக பார்ப்பது அரிதே.
இன்றைக்குத்தான் இதற்கு ஒரு விசேஷ கண்ணாடி இருப்பது தெரிய வந்தது.
முதலில் இது நிறகுருடு பிரச்சினையை குணப்படுத்தாது. கிட்டப்பார்வை தூரப்பார்வை என்று நாம் கண்ணாடி அணியும்போது அவை சரியான பார்வைக்கு ஹேதுவாக இருக்கின்றனவே ஒழிய அதை சரி செய்வதில்லை, இல்லையா?
அது போலத்தான் இதுவும். அணிந்து கொண்டால் அணியாமல் இருப்பதைவிட நல்ல பார்வையை பெறலாம்.
எப்படி வேலை செய்கிறது? உதாரணத்துக்கு பச்சை சிவப்பு பிரச்சினை என்று வைத்துக்கொள்வோம். இந்த நிறங்களை தனித்தனியாக உணராமல் ஒன்றின்மேல் ஒன்று அமைந்ததாக உணர்கிறார்கள் என்பதே அடிப்படையில் பிரச்சினை. இந்த 'ஒவர் லேப்பிங்'கை இது வெட்டி விடுகிறது. 'கூலிங் க்ளாஸ்' போலவே சில நிறப்பிரிகையின் அலைவரிசைகளை வெட்டி விடுகிறது. இதனால் நிறங்களை தனித்தனியாக உணர்கிறார்கள். ஒரு குறை இல்லாதவர் உணர்வது போல இல்லாவிட்டாலும் முன்னே இருந்ததை விட பார்வை நன்றாகவே இருக்கும்.
குறைபாட்டை பொருத்து இது வேலை செய்யலாம் செய்யாமல் போகலாம். அதனால் வாங்கும் முன் பத்து நிமிஷத்துக்காவது போட்டு பார்த்து வித்தியாசம் இருந்தால் மட்டுமே வாங்கும் படி பரிந்துரை செய்கிறார்கள்.
வலையில் தேஎடினால் ரூ 8,000 அளவில் இந்தியாவிலேயே கிடைப்பதாக தெரிகிறது.
கூடுதல் தகவல்களுக்கு இந்த விடியோவை பாருங்கள்.

கடைசியாக ஒரு புதிர். பிறவிக்குருடருக்கு எல்லாம் கருப்பாக தெரிகிறதா? விடையை பின்னூட்டத்தில் கொடுங்கள்.



No comments:

Post a Comment

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!

ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்

முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை . சிரமமாக இருக்கிறது . அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை ....