முன்னே
போல இப்போதெல்லாம் உட்கார்ந்து
எழுத முடியவில்லை. சிரமமாக
இருக்கிறது. அதனால்
போஸ்ட் அதிகம் போடவில்லை.
உம்....
திருப்பியும்
ஒரு மருத்துவ பதிவு.
என்ன செய்ய?
எனக்குன்னு
வந்து சேருகிறது. இது
முன்னே கூகுள் ப்ளசில்
போட்டதேதான்.
மருத்துவத்தில்
ஒரு பெரிய பிரச்சினை
ஆன்டிபயாட்டிக்குகளுக்கு
பாக்டீரியா கொஞ்ச நாட்களில்
ஒலஒலாட்டி காட்டி விடுவதுதான்.
ஆன்டிபயாட்டிக்
ரெசிஸ்டன்ஸ் என்கிறார்கள்.
அதாவது
பாக்டீரியாக்களில் சில
தன்னுள்ளே வரும் மருந்தை
வெளியேற்ற கற்றுக்கொள்கின்றன.
எப்லக்ஸ் பம்ப்
என்னும் வழியில் இது சாத்தியமாகிறது.
மற்ற பாக்டீரியாக்கள்
அழிந்துவிட இந்த வழியை
கற்றுக்கொண்டவை பல்கிப்பெருகி
விடுகின்றன. அடுத்து
அதே மருந்தை கொடுத்தால்
பயனிருப்பதில்லை. பொதுவாக
இது உடம்பு சரியாகிவிட்டது
என்று ஆன்டிபயாட்டிக்கை ஒரு
கோர்ஸாக சாப்பிடாமல் நடுவில்
நிறுத்திவிடுவதால் சுலபமாக
நடக்கிறது.
இந்தியன்
இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூர்கியில்
இதற்கு ஒரு தீர்வை 2017
ஆம் வருடம்
கண்டு பிடித்தார்கள்.
"IITR08027" என்னும்
மாலிக்யூல் இந்த பம்புக்கு
தேவையான ப்ரோட்டன் க்ரேடியன்டை
பாதிக்கிறது. இதனால்
ஆன்டிபயாடிக் வெளியே பம்ப்
ஆவதன் வேகம் வெகுவாக
குறைக்கப்படுகிறது.
அது வேலை செய்ய
ஆரம்பித்துவிடுகிறது.
முழு
கட்டுரை இங்கே
No comments:
Post a Comment
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!