சுமார்
1.8 கோடி
புதிய கான்சர் கேஸ்கள் ஒவ்வொரு
வருஷமும் கண்டு பிடிக்கப்படுகின்றன.
உலகிலேயே அதிக
சாவை உண்டக்கும் நோய்களில்
இரண்டாவது இடம் கான்சருக்கே.
இப்படி
இருக்கையில் கான்சருக்கான
சிகிச்சை முறைகளில் வரும்
புதிய முன்னேற்றங்கள் கூர்ந்து
கவனிக்கப்படுவது இயல்பே.
இந்த
பதிவுகளில் என் கவனத்துக்கு
வரும் நல்ல செய்திகளை பார்க்கையில்
இவற்றின் பங்கு அதிகமாகவே
இருப்பது போல் இருக்கிறது!
சரி.
லேட்டஸ்ட்
மல்டி டார்கெட் டாக்சின்
எனப்படும் முடாடோ (mu.ta.to)
பாக்டீரியோபாஜ்
எனப்படுவது பாக்டீரியாவை
தாக்கும் ஒரு 'வைரஸ்'.
ஆன்டிபாடி
போன்ற ப்ரோடீனுக்கான டிஎன்ஏ
கோடிங்கை இதன் மீது பொருத்த
முடியும். அப்படி
பொருத்தினால் அதன் மீது அந்த
ப்ரோடீனே இருப்பது போல ஒரு
மாயை தோற்றத்தை உண்டக்க
முடியும். இதன்
மூலம் மற்ற ப்ரோடீன்கள்,
டிஎன்ஏ துணுக்குகள்
போன்றவை எப்படி கலக்கும்
என்பதை ஸ்க்ரீன் செய்ய முடியும்.
2018 இல்
ஒரு அறிவியல் குழு இந்த பாஜ்
குறித்தான ஆய்வுக்கு நோபல்
பரிசை பெற்றது. புதிய
ப்ரொடீன்களை உருவாக்கினால்
அவை எப்படி நடந்து கொள்ளும்
என்பதை ஆராய இந்த குழு ஆராய்ச்சி
செய்தது. குறிப்பாக
சிகிச்சைக்கான ஆன்டிபாடிகள்.
இதே
போல ஆன்டி பாடிகளுக்கு பதிலாக
சில பெப்டைட்களை உருவாக்க
ஏஈபிஐ முயற்சி செய்தது.
அவை இன்னும்
சிறியவை, உருவாக்க
கொஞ்சம் சுலபம், ஆகவே
குறைந்த செலவு. இவர்கள்
ஆரம்பத்தில் மற்றவர்கள்
போலவே கான்சருக்கான பெப்டைட்களை
தயாரிக்க முயன்று கொண்டு
இருந்தார்கள். பின்
ஆராய்ச்சியின் திசை திரும்பியது.
மற்ற கான்சரை
கொல்லும் மருந்துகளும்
முறைகளும் எப்படி வேலை செய்தன,
ஏன் அவை
தோல்வியுற்றன அல்லது ஆரம்பத்தில்
வேலை செய்து பின் சில நாட்களில்
பயனற்று போயின என்று ஆராய்ந்தார்கள்.
இதற்கு தீர்வையும்
கண்டு பிடித்தார்கள்.
கான்சர்
செல்களில் ஏதோ ஒரு குறிப்பிட்ட
இடத்தை மருந்துகள் இலக்காக்கின.
இதை தாக்கும்போது
கான்சரை உண்டு பண்ணும் ஏதோ
ஒரு ப்ராசஸ் இருக்கிறதல்லவா?
அது பாதிக்கப்பட்டது.
அந்த ப்ராசஸ்
சரி என்று வேறு பாதையை
தேர்ந்தெடுக்கிறது.
முன்னே தாக்கிய
இலக்கு இல்லாவிட்டால்
பரவாயில்லை. நான்
வேறு இடத்தை உருவாக்கிக்கொள்ளுகிறேன்
என்று செயலாற்றியது.
விளைவு?
மருந்து வேலை
செய்வதை நிறுத்தியது.
ம்ம்ம் அல்லது
அது செய்யும் வேலை இப்ப்போது
கான்சர் தன்மையை பாதிக்கவில்லை
என்னும் நிலை உருவானது.
முடாடோ
என்ன செய்கிறது? அது
மற்ற மருந்துகள் போல ஒரு
இலக்கை கொண்டு செயல்படவில்லை.
மூன்று
இலக்குகளையாவது குறி வைத்தது.
இதற்கு கான்சர்
உருவாக்கும் ப்ராசஸ் ஒரு
மாற்றை கண்டு பிடிக்கும்
முன் அந்த செல் செத்துவிடும்.
பெரும்பாலான
கான்சர் மருந்துகள் வேகமாக
வளரும் கான்சர் செல்களை
குறிவைக்கின்றன. ஆனால்
கான்சர் செல்களின் ஸ்டெம்
செல்கள் மெதுவாக வளருபவை.
ஆகவே அவை
தப்பிக்கின்றன. எல்லாம்
முடிந்தது என்று நினைக்கும்
போது அவை திருப்பியும் கான்சர்
செல்களை உற்பத்தி செய்கின்றன.
இப்படி திரும்பி
வரும் போது அவை மருந்துக்கு
பணிவதில்லை, பாதிக்கப்படுவதில்லை.
கான்சர் திசுக்களை
ஆராய்ந்து அவற்றின் மீது
காணப்படும் அதிகப்படி
ப்ரோடீன்களை கண்டிபிடித்துவிட்டால்
போதும். அவை
கான்சர் ஸ்டெம் செல்களிலும்
உள்ளன. ஆகவே
அவை முடாடோவுக்கு தப்ப முடியாது.
கடைசியாக
சில வகை கான்சர் செல்கள்
பாதுகாப்பு கவசத்தை உருவாக்கிக்
கொள்ளுகின்றன. இதனால்
பெரிய மருந்து மாலிக்யூல்கள்
செல்லுக்குள் நுழையவே
கஷ்டப்படும். ஆனால்
முடாடோ மிகச்சிறியவை.
12 பெப்டைட்களே
போதும். அத்துடன்
வளைந்து கொடுக்கக்கூடியவை.
இதனால் இவற்றுக்கு
உடல் எந்த ஆன்டிபாடியையும்
உருவாக்குவதில்லை.
மருந்துகளைப்போன்ற
பக்க விளைவுகள் கிடையாது
என்று சொல்ல வேண்டியது இல்லை.
கான்சர் செல்கள்
தவிர மற்ற செல்கள் பாதிக்கப்படுவதில்லை.
இதன்
கிளினிகல் சோதனைகள் விரைவில்
துவங்க உள்ளன. சில
வருடங்களிலேயே பயன்பாட்டுக்கு
வந்துவிடலாம்.