Tuesday 22 January 2019

ரயில் பெட்டிகள்








இரண்டு நாட்களுக்கு முன்னே இந்தியாவில் இருந்து ஆஸ்த்ரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பப்போகிறார்கள் என்று செய்தியை சமூக ஊடகங்களில் பார்த்தேன். முதன்முறையாக என்றெல்லாம் எழுதப்பட்டு இருந்தது.
இல்லையே முன்னேயே நடந்திருக்கிறது போலிருக்கிறதே என்று வலையை தோண்டினால் ஆமாம், முன்னேயே நைஜீரியா தான்ஃஜானியா போன்ற சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பங்களாதேஷ், ஶ்ரீலங்கா, மியான்மார், தைவான், தாய்லாந்த் ஆகிய ஆசிய நாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்து இருக்கிறோம்.
பின்னே இப்போது இது ஏன் அடிபடுகிறது?
வளர்ந்த நாடான ஆஸ்திரேலியா இந்த ஆர்டரை கொடுத்து இருக்கிறது.
ப்ரான்ஸ் நாட்டின் ஆல்ஸ்டம் நிறுவனத்துடன் இந்தியா 'மேக் இன் இண்டியா' திட்டத்தில் ஒப்பந்தம் செய்ததன் பேரில் ஆந்திராவின் சிரி சிடி இல் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. அங்கே சென்னை கொச்சி லக்னோ நகரங்களில் மெட்ரோ சேவைக்கு பெட்டிகள் தயாராகின. 2014 இல் ஆஸ்திரேலிய மெட்ரோவுக்கு ஆர்டர் பெற்று சரியான நேரத்தில் பெட்டிகளை முடித்துக்கொடுத்து இருக்கிறது. அடுத்து கனடாவுக்கும் மும்பையின் மூன்றாம் தடத்துக்கும் குறி வைத்து இருக்கிறது.
இது ஒரிஜினல் இந்திய கம்பனி தயாரிப்பு இல்லைதான். இருந்தாலும் இந்த மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் பல தொழிற்நுட்பங்கள் இந்தியாவுக்கு வரவும் அனுபவம் கிடைக்கவும் வாய்ப்பு பெருகி வருகிறது.


No comments:

Post a Comment

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!

ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்

முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை . சிரமமாக இருக்கிறது . அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை ....